திங்கள், 22 டிசம்பர், 2014

பட்டாம்பூச்சிக் கதைகள்

சக மனிதனின் தோல்வியில் இருந்து நான் அடைந்த ஒன்றை என் வெற்றி என்று கொண்டாடினால் நான் மனிதனே அல்ல. 

பட்டாம்பூச்சிக் கதைகள்

அஷ்வந்த்ரா மழையாக
இருக்ககூடும்.
ஆஷ்ரிதாவுக்கு குடையை விட மழை
பிடித்திருக்க கூடும்.
எழுதாத சில வார்த்தைகளுக்குள்
ஒரு வாழ்க்கை

ஒளிந்திருக்கக் கூடும்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....