ஈக்களிடமிருந்து
தேனைத் திருடுவது போல்
உன்னிடமிருந்து கவிதைகளைத்
திருடுகிறேன்
"அடேய் திருட்டுப்பயலே"
"அடேய் திருட்டுப்பயலே"
என்று ஒற்றை வாக்கிய
அணிந்துரை எழுது
அது போதும்
நாளைக்கே புத்தகம்
போட்டுவிடுவேன்..!
மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது அவளது ஞாபகங்கள் ....