சொல்ல நினைத்து
சொல்லாமல் இருந்த கதைகள்
நீராகவும்,
சொல்லி முடித்ததும்
உறைந்து நின்ற கதைகள்
பாறையாகவும்,
"இந்த ஆறு" அப்படியே தான் இருக்கிறது.
சொல்லாமல் இருந்த கதைகள்
உப்பாகவும் ,
சொல்லி முடித்த கதைகள்
மணலாகவும் மாறும்.
இந்த ஆற்றில் தான்,
பண்டிகை முடிந்ததும்
சாமியை கரைக்கும்
சடங்கையும் செய்கிறோம்.
கதைகளை போலவே கடவுளும்
கல்லில் உறைந்தும்,
நீரில் கரைந்தும்..