சனி, 15 ஏப்ரல், 2017

பட்டாம்பூச்சிக் கதைகள்

பள்ளத்தாக்கெங்கும்
அடர்ந்தமௌனம்

அருகிலேங்கோ
அத்திமரம் பூத்திருக்கலாம்

கிழக்கின் மேகம் கருத்திருந்தது

அதிகாலைக்கு பின்னும்
வெகுநேரம்
புல்லை புணர்ந்து கிடந்தது பனி

பழத்தோட்டத்தின் சுகந்தம் காற்றில்

எறும்புகள் அறிந்திருந்தன
மழைக்காலத்தின்
ஆரம்பநாள் அதுவென்று

எனக்கு நம்பிக்கை இருந்தது
நாளை மழை ஈசல்களை சந்திப்பேனென்று

அதற்குள்
நான் அவளை
சந்தித்தாக வேண்டும்

அந்நேரம்
பிரபஞ்சமெங்கும்
கைகளை அசைக்கிறாள் நந்தினி

எல்லைஇல்லாப் பெருவெளியில்
சிறகுகளின்றி பறக்கிறேன் நான்

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....