Skip to main content

Posts

Showing posts from April 15, 2017

பட்டாம்பூச்சிக் கதைகள்

பள்ளத்தாக்கெங்கும் அடர்ந்தமௌனம் அருகிலேங்கோ அத்திமரம் பூத்திருக்கலாம் கிழக்கின் மேகம் கருத்திருந்தது அதிகாலைக்கு பின்னும் வெகுநேரம் புல்லை புணர்ந்து கிடந்தது பனி பழத்தோட்டத்தின் சுகந்தம் காற்றில் எறும்புகள் அறிந்திருந்தன மழைக்காலத்தின் ஆரம்பநாள் அதுவென்று எனக்கு நம்பிக்கை இருந்தது நாளை மழை ஈசல்களை சந்திப்பேனென்று அதற்குள் நான் அவளை சந்தித்தாக வேண்டும் அந்நேரம் பிரபஞ்சமெங்கும் கைகளை அசைக்கிறாள் நந்தினி எல்லைஇல்லாப் பெருவெளியில் சிறகுகளின்றி பறக்கிறேன் நான்