திங்கள், 29 டிசம்பர், 2014

பட்டாம்பூச்சிக் கதைகள்






நீ அறிந்திருக்க
வாய்ப்பில்லை..
நிராகரிப்புகளால்
என் இதயம்
கிழிகிற போதெல்லாம்
உன் நினைவென்னும்

ஊசியால்

நான் தைத்துக்கொண்ட

என் கடந்த காலங்கள்..


         

பட்டாம்பூச்சிக் கதைகள்



இன்றும்  அந்த நீலம் 
மாறாமல் 
என் இதயத்தில்
தேக்கி  வைத்திருக்கிறேன்.
வா ஆளுக்கு
ஒரு கோப்பை வானம்

ஊற்றிக் குடிக்கலாம்.

                 

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....