வெள்ளி, 20 மார்ச், 2015

பட்டாம்பூச்சிக் கதைகள்



உன்னோடு பரிமாற மட்டும்
என்று ஒதுக்கி வைத்த
வார்த்தைகளைத் தொலைத்து விட்டு 
வனாந்தரத்தில் அலைகிறது மொழி 
வெயிலில் கருகி 

மணலில் புதையுண்ட
வார்த்தைகளை மீட்டெடுக்க முடியாமல் 
தவிக்கிறேன் நான்...!

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....