வெள்ளி, 19 டிசம்பர், 2014

பட்டாம்பூச்சிக் கதைகள்


அகாலத்துயரம் 
துரத்தும் போதெல்லாம் 
உன் நினைவென்னும் 
மூச்சிழுத்து 
நெடுந்தூரம் ஓடுகிறேன்.


பட்டாம்பூச்சிக் கதைகள்


நீ 
குடை பிடித்து 
மழை மறுத்தால் 
அது 
மழைக்காலம் அல்ல. 
குடைக்காலம்.

பட்டாம்பூச்சிக் கதைகள்


இலைகளை 
இவள் மீது உதிர்த்து 
இவள் சிலிர்ப்பில் 
துளிர்க்கும் 
வினோத மரங்கள் 
நிறைந்தது காடு..!

பட்டாம்பூச்சிக் கதைகள்

எனக்கு மட்டும் தான் தெரியும்
நீ பூமிக்கு வந்த நாளில்
வானத்தில்
ஒரு நட்சத்திரம் தொலைந்த கதை





பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....