திங்கள், 23 நவம்பர், 2015

பட்டாம்பூச்சிக் கதைகள்




தான் அமரும் இடமெல்லாம் 
கொலுவிருக்கும் பட்டாம்பூச்சியும் 
கொலு வைக்கக் கூடும்.

சனி, 21 நவம்பர், 2015

பட்டாம்பூச்சிக் கதைகள்

இனி எந்தக் கடவுளாலும்
பிறிதொரு மனிதனாலும்
தரவியலாப் 
பின் மதியப் பொழுதொன்றில்..
பின்வாசல் மழைவீதியில் 
ஐந்தே நிமிடம் நடந்தேன் ..

இல்லை..

"கடந்தேன் கடந்தேன் கடந்தேன்"..

"சொல்லொன்றில் தீராப் 
பொருள்கொண்ட 
வாழ்வன்றோ வரம்"
இவன் 
காமம் துறந்த ராவணன் 
ஆன கதையை 
இனி அந்த ராமனுக்குச் சொல்..!



பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....