ஞாயிறு, 16 ஏப்ரல், 2017
பட்டாம்பூச்சிக் கதைகள்
சிம்ஸ் பூங்கா சாலையில்
உன் சுட்டும் விரல் பிடித்து
சுகமாய் நடந்தேன்
காற்று கற்பூர மரத்தை தழுவ
நழுவிய இல்லை ஒன்று
உன் கூந்தலில் விழ
இல்லை எடுப்பதாய் கூந்தல்
அளந்த விரல்கள்.
அமெரிக்கா போக வேண்டும்
உன் ஆசை நீ சொல்ல
அலபாட்ரா சிறகு
கடன் வாங்கி வானத்தில்
தூங்க வேண்டும்
என் ஆசை நான் சொன்னேன்
நம்மை நனைக்க
தயாரானது மழை
இருவரும் கட்டிக்கொண்டு
ஒருவருக்கொருவர் குடையானோம்
துணைக்கு ஆளின்றி
தனியே நனைந்தது மழை
உன் சுட்டும் விரல் பிடித்து
சுகமாய் நடந்தேன்
காற்று கற்பூர மரத்தை தழுவ
நழுவிய இல்லை ஒன்று
உன் கூந்தலில் விழ
இல்லை எடுப்பதாய் கூந்தல்
அளந்த விரல்கள்.
அமெரிக்கா போக வேண்டும்
உன் ஆசை நீ சொல்ல
அலபாட்ரா சிறகு
கடன் வாங்கி வானத்தில்
தூங்க வேண்டும்
என் ஆசை நான் சொன்னேன்
நம்மை நனைக்க
தயாரானது மழை
இருவரும் கட்டிக்கொண்டு
ஒருவருக்கொருவர் குடையானோம்
துணைக்கு ஆளின்றி
தனியே நனைந்தது மழை
![]() |
சனி, 15 ஏப்ரல், 2017
பட்டாம்பூச்சிக் கதைகள்
பள்ளத்தாக்கெங்கும்
அடர்ந்தமௌனம்
அருகிலேங்கோ
அத்திமரம் பூத்திருக்கலாம்
கிழக்கின் மேகம் கருத்திருந்தது
அதிகாலைக்கு பின்னும்
வெகுநேரம்
புல்லை புணர்ந்து கிடந்தது பனி
பழத்தோட்டத்தின் சுகந்தம் காற்றில்
எறும்புகள் அறிந்திருந்தன
மழைக்காலத்தின்
ஆரம்பநாள் அதுவென்று
எனக்கு நம்பிக்கை இருந்தது
நாளை மழை ஈசல்களை சந்திப்பேனென்று
அதற்குள்
நான் அவளை
சந்தித்தாக வேண்டும்
அந்நேரம்
பிரபஞ்சமெங்கும்
கைகளை அசைக்கிறாள் நந்தினி
எல்லைஇல்லாப் பெருவெளியில்
சிறகுகளின்றி பறக்கிறேன் நான்
அடர்ந்தமௌனம்
அருகிலேங்கோ
அத்திமரம் பூத்திருக்கலாம்
கிழக்கின் மேகம் கருத்திருந்தது
அதிகாலைக்கு பின்னும்
வெகுநேரம்
புல்லை புணர்ந்து கிடந்தது பனி
பழத்தோட்டத்தின் சுகந்தம் காற்றில்
எறும்புகள் அறிந்திருந்தன
மழைக்காலத்தின்
ஆரம்பநாள் அதுவென்று
எனக்கு நம்பிக்கை இருந்தது
நாளை மழை ஈசல்களை சந்திப்பேனென்று
அதற்குள்
நான் அவளை
சந்தித்தாக வேண்டும்
அந்நேரம்
பிரபஞ்சமெங்கும்
கைகளை அசைக்கிறாள் நந்தினி
எல்லைஇல்லாப் பெருவெளியில்
சிறகுகளின்றி பறக்கிறேன் நான்
சனி, 8 ஏப்ரல், 2017
பட்டாம்பூச்சிக் கதைகள்
ஞாயிறின் பிரிவை மறந்து
திங்களின் வரவை
கொண்டாட சொன்னவள் நீதானே..!
எல்லா அந்தியிலும்
சூரியனை வழியனுப்பிவிட்டு
நிலவுக்காய் காத்திருக்கும் என் ஷாலினிக்கு
சில நட்சத்திரங்களைப்
பரிசளிக்க காத்திருக்கிறது வானம்
திங்களின் வரவை
கொண்டாட சொன்னவள் நீதானே..!
சூரியனை வழியனுப்பிவிட்டு
நிலவுக்காய் காத்திருக்கும் என் ஷாலினிக்கு
சில நட்சத்திரங்களைப்
பரிசளிக்க காத்திருக்கிறது வானம்
வியாழன், 6 ஏப்ரல், 2017
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பட்டாம்பூச்சிக் கதைகள்
மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது அவளது ஞாபகங்கள் ....

-
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் ஊருக்குள் வருவதும் போவதுமாய் இருக்கிறது இந்த புகைவண்டி. பால்யங்களில் என் அம்மா எனக்கு ஊட்டியது ர...
-
எப்போதும் அக்கா, எப்போதாவது நந்து.. அபூர்வமான தருணங்களில் அம்மா. இப்படி எல்லாமும் ஆனவள் நீயே. இப்போதெல்லாம் கோவிலுக்குப் போகத் தோன்...