ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

பட்டாம்பூச்சிக் கதைகள்

சிம்ஸ் பூங்கா சாலையில் 
உன் சுட்டும் விரல் பிடித்து 
சுகமாய் நடந்தேன் 
காற்று கற்பூர மரத்தை தழுவ 
நழுவிய இல்லை ஒன்று
உன் கூந்தலில் விழ
இல்லை எடுப்பதாய் கூந்தல்
அளந்த விரல்கள்.
அமெரிக்கா போக வேண்டும்
உன் ஆசை நீ சொல்ல
அலபாட்ரா சிறகு
கடன் வாங்கி வானத்தில்
தூங்க வேண்டும்
என் ஆசை நான் சொன்னேன்
நம்மை நனைக்க
தயாரானது மழை
இருவரும் கட்டிக்கொண்டு
ஒருவருக்கொருவர் குடையானோம்
துணைக்கு ஆளின்றி
தனியே நனைந்தது மழை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....