செவ்வாய், 6 நவம்பர், 2018

பட்டாம்பூச்சிக் கதைகள்

இறுதித் துளி மழைநீர் 
வடியும் வரை
இதயத்தை அழகாக
வைத்துக் கொள்.
அது
மழைக்கு முன் என்றாலும்
வெயிலுக்கு பின் என்றாலும் 
அங்கு
அழகாய் பூத்திருந்த 
ஆன்மா - அது
நீ தான்

பட்டாம்பூச்சிக் கதைகள்

என்னிடம் மிச்சமிருக்கும் மகிழ்ச்சி
சிறு புன்னகை மட்டும் தான்.
வாழ்க்கை மீண்டும் அனுமதித்தால்
உன்னை சந்திக்கும் போது
அதை நிச்சயம் செலவழிப்பேன். காதல் 😙😍

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....