Skip to main content

பட்டாம்பூச்சிக் கதைகள்



வாழ்வின் அவசரம்
முகத்திலறைய
முதுகில் அறையும்
வெயிலின் கரங்களை
சபித்துக்கொண்டே நடந்தேன்
மாநகர வீதியில்
நகரத்தெருக்களில் நடந்து
களைப்புற்று ஒதுங்கினேன்
பயணிகள் நிழற்குடையில்
"மச்சான்" என்ற குரலில்
அதிர்ந்து நிமிர்ந்தேன்
கல்லூரி வாழ்வில்
பழகிப்பிரிந்த
குட்டிசுவர்வாசிகளில் ஒருவன்
எப்பிடிடா இருக்க
உன் ஆளு எப்படி இருக்கா
என்ன பண்ற நீ எங்க இருக்க.....
அவன் கேட்டுக்கொண்டே இருக்கையில்
பதில்களேதுமற்ற நான்
மீண்டும்
ஒரு உபயோகமற்ற பொழுதில்
உன்னை சந்திக்கிறேன் என்று
எதிரில் வந்த பேருந்தில்
அவசரமாய் ஏறித் தொலைத்தேன்
அவன் நட்பை...

Comments

Post a Comment

Popular posts from this blog

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மூடியிருக்கும் கைகளுக்குள் இறுக்கத்தை தவிர வேறெதுவும் இல்லை.  விரல்களை மடல் போல் மெல்லத் திறந்து பார்க்கிறேன். வந்தமரும்  வண்ணத்துப்பூச்சி நீயில்லை. நவம்பர் மழையில் நனைந்து கொண்டே இருக்கிறது. நாளை பூக்குமென்று கனவுகள் காணுமென் காடு. அதிகாலை குளிர் கிழித்து கதிர் ஊசிகள் தைக்கும் போது இதயம் உன்னை நினைத்து கொள்கிறது.  அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் கேள்விகள். என்றேனும் வரக்கூடும்  பதிலாக ஒரு பட்டாம்பூச்சி.  அதிகாலை குளிர் அதிகரட்டி பேருந்து படிக்கட்டில் நான் பின்னிருக்கையில் நீ எண்ணங்கள் ஆயிரம்.  கண்ணதாசன் கைவிட்டான் பாரதி தீக்குளித்தான். ஷெல்லியும் ஷேக்ஸ்பியரும் செத்தே போனார்கள்.  தேன் கூட்டுக்குள் வண்ணத்துப்பூச்சி நெரிசலான பேருந்துக்குள்  நீ.  தொற்றிக் கொண்டது தொல் காப்பியத்துக்கு முன்பு தொடங்கிய  நம் தொல்லியல் காதல்.  ☕☕☕

பட்டாம்பூச்சிக் கதைகள்

ஒரு தேயிலை தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளியின்  எளிய குடும்பம் அது.  அந்த மலைகிராமத்தில்  ஒரு அரசு மருத்துவமனையில் 1983ன் மே மாதத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தையை, தூக்கி கொண்டு அங்கும் இங்கும் சில செவிலியர்கள் அலைந்து கொண்டிருந்தனர். வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம் எப்படி இருக்கும் என்பதும், வாழ்க்கை என்பது எவ்வளவு மகத்துவமான வரம் என்பதையும், பிறந்த முதல் நாளிலேயே வாழ்க்கை அந்த குழந்தைக்கு, கற்றுக்கொடுக்க ஆரம்பித்து விட்டது. சவலைப்பிள்ளையான அவன் செவிலியர் அரவணைப்பிலிருந்து தாயின் கைகளுக்கு கையளிக்க பட்ட போது ஒரு தாய் தன் வாழ்வின் துயர் மிகுந்த நாட்களுக்குள் தள்ளப்படுகிறாள்.  ஒரு துளிப்பால் கூட ஒவ்வாமையாக மாறிப் போகும் அந்த குழந்தையை கொஞ்சம் கொஞ்சமாய் தேற்றுவதற்குள் செத்துபிழைக்க வேண்டியதாய் இருந்தது. அனைத்தையும் மறுதலிப்பதையே தன் பிறவி குணமாக கொண்டு அந்த குழந்தை வளர ஆரம்பிக்கிறது. முன் கோபமும், முரட்டுத்தனமுமாக அந்த குழந்தை வளரத் துவங்க, பிறவியிலிருந்தே அதை கூர்ந்து கவனிக்கும் தாய் மிகுந்த பதற்றம் அடைகிறாள். தனக்குள் உள்ளொடுங்கிய சுபாவமும், பிடிவாதமும் கொண்டு அவன் வளர துவங்குகிறான். ம

பட்டாம்பூச்சிக் கதைகள்

நமக்கேயான தனிமை  வாய்க்கும் போதெல்லாம்   நெருப்பை எரியவிட்டு   பனியடர்ந்த பள்ளத்தாக்கின்   குளிருக்குள்   பதுங்கிக் கொண்டோமல்லவா..!   அந்த ரகசியங்களை   கிளன்டேல் காடுகள்   பத்திரமாய் வைத்திருக்கிறது  இன்றும்..!