திங்கள், 3 ஆகஸ்ட், 2009

பட்டாம்பூச்சிக் கதைகள்



வெயிலும்
வேர்வையில் நாறிய உடலும்
கசங்கிய உடைகளும்
கலங்கிய விழிகளுமாய்
பசியோடு பெருநகர வீதிகளில்
வேலைதேடும் யாவருக்கும்
வாய்த்து விடுவதில்லை
பெட்ரோல் நிரப்பிய வாகனமும்,
புகைப்பிடிக்க
தேநீர் பருகவென
சில்லறை தந்துதவும் நண்பர்கள்..
தேடித் தெருவில் எதையோ தின்று
சுதந்திரமாய் பெருவழிகளில் அலையும்
தெரு நாய்களுக்கிருக்கும் மரியாதை கூட
எனக்கிருக்கப் போவதில்லை
ஒரு நல்ல வேலைகிடைக்கும் வரை.
தன் மீது விழும்
தூய மழைநீரை
பற்றிய கவலைகள் ஏதுமற்று
தேங்கிக்கிடக்கும் கூவமென
கனவுகள்.
பெருநகர வீதிகளில் ஓடும்
மழைவெள்ளம் போலாகும் மனசு
நகரத்தெருக்களில்
சோற்றுக்க்காகவென
ஓடும் அவசரம்
வீதிகளுக்கடியில் ஓடிகொண்டிருக்கும்
சாக்கடைஎன உள்ளுக்குள்
நாறிக்கொண்டிருக்கிறது வாழ்வு
நகரமாகும் மனசின் நியாபக தெருக்களில்
கேட்ப்பாரற்றுக் கிடக்கிறது
புத்தகப் பையோடு
கொஞ்சம் புகழையும்
சுமந்த என் இறந்தகாலம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....