திங்கள், 3 ஆகஸ்ட், 2009

பட்டாம்பூச்சிக் கதைகள்



தேயிலை மரங்கள்
செடிகளாய்
கவாத்து செய்யப்பட்ட
பச்சைப்பள்ளத்தாக்கு
கருங்கல்லின் மேல்
செம்மண் குழைத்து தேய்த்து
சுண்ணாம்பு பூசிய வீடு..
மூடுபனியின்
குளிர்ந்த கரங்களின் தழுவலில்
நடுங்கிக்கொண்டிருக்கும்
வயோதிகனின் கடைசி மூச்சென
கதவிடுக்கில் நுழைகிறது காற்று
காலாண்டு பகல்பொழுதை
கம்பளிக்குள் திணிக்கிறது குளிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....