Skip to main content

Posts

Showing posts from September 11, 2015

பட்டாம்பூச்சிக் கதைகள்

10:09:2015 நேற்று இரவெல்லாம்  குடகு மலையாக கிடந்தது உடல்.  மடிகேரியில் அலைந்து திரிந்த ஆன்மாவை,  அழுது புலம்பிய மேகங்களை,  குளிராய் தழுவிய காற்றின் கைகளை,  அதிகாலை பனித்துளிகளால்  ஆசிர்வதிக்கப்பட்ட மூங்கில் காடுகளை,  கண்ட பின்பும் என் காதல்  அந்த பாள்ளத்தாக்கில் தான் துயில்கிறது  என்று நம்புகிறாயா..!  அது நீ போகும் திசையெல்லாம்  ஒரு மெல்லிய இசையாகி  உன்னை வரவேற்பதை அறியாதவள் அல்ல நீ. 11:09:2015 வழக்கம் போல் எழுந்தவுடனே அவளை அழைத்தல்.. அவளோடோளாவுதல் என்றே துவங்கியது இந்தக் காலையும்..! "இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்   வல்லது அவர்அளிக்கு மாறு." - என்றேன்..! அப்படியா..! என்றாள் "ஆமாம்" என்றேன். "அதான் காலைலேயே வெயில் சுர்ருன்னு அடிக்குது"- என்றாள். "அன்னிக்கு மழை பெய்யுதுன்னு சொன்ன".- என்றேன். "அன்னிக்கு நீ வேறு குறள் சொன்னாய்" - என்றாள். "நம்ம ஊர்ல குறள் கேட்டா இதெல்லாம் நடக்குது&qu