Skip to main content

Posts

Showing posts from September 24, 2015

பட்டாம்பூச்சிக் கதைகள்

என் இனிய பட்டாம்பூச்சிக்கு:  நீ வந்து அமராமல்   என் பூக்கள் மணப்பதில்லை.                                           -இப்படிக்கு காடு.

பட்டாம்பூச்சிக் கதைகள்

ஒரு நவம்பர் மாதத்தின் முதல் நாளில் இங்கு தான் அழகான அந்த வெள்ளை நாய்க்குட்டி உன் பின்னால் வாலாட்டிக் கொண்டே வந்தது..! அன்று பழுத்த இலைகளை கண்களாக்கி நம்மைப் பார்த்துக்கொண்டிருந்த மரங்களை பத்திரமாய் வைத்திருக்கிறேன் நினைவுகளில். ஒவ்வொரு முறை கடக்கிறபோதும் வெள்ளை நாய்குட்டியாக மாறி வாலாட்டும் மனசை எங்கே ஒளித்து வைப்பது.

பட்டாம்பூச்சிக் கதைகள்

நமக்கேயான தனிமை  வாய்க்கும் போதெல்லாம்   நெருப்பை எரியவிட்டு   பனியடர்ந்த பள்ளத்தாக்கின்   குளிருக்குள்   பதுங்கிக் கொண்டோமல்லவா..!   அந்த ரகசியங்களை   கிளன்டேல் காடுகள்   பத்திரமாய் வைத்திருக்கிறது  இன்றும்..!

பட்டாம்பூச்சிக் கதைகள்

சுதேசிகளும் விதேசிகளும் பரதேசிகளும் அன்றாடம் வந்து போகும் உன்னைப்பற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் சொன்ன விந்தையான கதைகளிலிருந்து துவங்கியிருக்க கூடும் இரயில்மொழி..   குக்கூ...   சிக்கு புக்கு... சிக்கு புக்கு...