Skip to main content

Posts

Showing posts from February 3, 2016

பட்டாம்பூச்சிக் கதைகள்

குளிரும் உன் நினைவுகளில் நடுங்கிக்கொண்டிருக்கிறேன் போர்வைக்குள் காதல் வைத்து என்னைப் பொதிந்து கொள்

பட்டாம்பூச்சிக் கதைகள்

எப்போதும் அக்கா, எப்போதாவது நந்து.. அபூர்வமான தருணங்களில் அம்மா.  இப்படி எல்லாமும் ஆனவள் நீயே. இப்போதெல்லாம்  கோவிலுக்குப் போகத் தோன்றினால் உன்னைச் சந்தித்துத் வீடு திரும்புகிறேன் இன்று போல்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

எல்லோரும் ஏன் CHURCH க்கு போறாங்கனு தெரியாமலே நாள் தவறாம நான் CHURCH க்கு போகஆரம்பிச்சேன்.  இறக்கி விட யாருமே இல்லாத சிலுவையி ல் ரொம்ப காலமா தொங்கிட்டே இருந்தார் இயேசு சாமி.  அவரோட வலி பத்தின எந்தக் கவலையும் இல்லாம, நந்தினியும், அமுதாவும் தினமும் சாமிகிட்ட ஒரு Dealing பேசிகிட்டிருந்தாங்க.  சாமி பத்தின எந்த அக்கறையும் இல்லாம நான் மெழுகா உருகி, திரியா கருகிட்டு இருந்தேன்.  முள்கிரீடம்,  ஆணி, சிலுவை. எல்லாம் குறியீடுகளாய் மாறி இருந்தது.

பட்டாம்பூச்சிக் கதைகள்

அன்றாட அழைப்புகள் இல்லை உள் பெட்டி திறக்கப்படவே இல்லை  என் தினசரி வாழ்வில்  தித்திக்கும் செய்திகள் இல்லை. என்னை வாசிக்க மட்டும்  நீ திறக்கும் முகப்புத்தகம், நீ வாசிக்க மட்டும் நான் எழுதும் நாட்குறிப்புகள். லைக்குகளுக்கும், கமெண்ட்களுக்கும் எப்போதும் புரிவதில்லை நம் நட்பு.

பட்டாம்பூச்சிக் கதைகள்

வெகுஜன இதழில் அச்சுப் பிழையின்றி வெளிவந்த முதல் கவிதையைப் போல்  மறக்க முடியாதவள். நல்ல நூலின் புரட்டப்படாத பக்கங்களைப் போல் எதிர்பார்ப்புக்குரியவள்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

நந்து: எனக்காக கடைசியா ஒரு வாய் மட்டும் சாப்பிடு. டவிஷ்: போம்மா உனக்காக தான் இவ்ளோ நேரம் சாப்பிட்டேன். நந்து: வெரிகுட் இவ்ளோ நேரம் எனக்காக சாப்பிட்ட. இப்போ உனக்காக ஒரு வாய் ப்ளீஸ். டவிஷ்: ம்ம்ம் போ ம்மா.. ‪#‎ தாய்மை