Skip to main content

Posts

Showing posts from September 15, 2015

பட்டாம்பூச்சிக் கதைகள்

சொல்ல நினைத்து  சொல்லாமல் இருந்த கதைகள்  நீராகவும்,  சொல்லி முடித்ததும்  உறைந்து நின்ற கதைகள்  பாறையாகவும், "இந்த ஆறு" அப்படியே தான் இருக்கிறது. சொல்லாமல் இருந்த கதைகள் உப்பாகவும் , சொல்லி முடித்த கதைகள் மணலாகவும் மாறும். இந்த ஆற்றில் தான், பண்டிகை முடிந்ததும் சாமியை கரைக்கும் சடங்கையும் செய்கிறோம். கதைகளை போலவே கடவுளும் கல்லில் உறைந்தும், நீரில் கரைந்தும்..