Skip to main content

பட்டாம்பூச்சிக் கதைகள்




நீங்கள் எப்போது ஒரு திரைப்படம் இயக்கப்போகிறீர்கள்? நண்பர்கள் அடிக்கடி என்னிடம் கேட்கின்ற கேள்வி இது. "நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது". இது அனைவருக்குமான என் பதில். ஒரு திரைப்படத்தை இயக்க நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதா? உண்மையில் என் பதில் போலியானது.
எனக்கு ஒரு திரைப்படத்தை இயக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அது இப்போதைக்கு அவசியமற்றதாக தோன்றுகிறது . சிலசமயங்களில் நான் அதீதமான வெறுமையை உணர்கிறேன். அந்த வெறுமை என்னை ஒரு பள்ளத்தாக்கை நிறைக்கிற அமைதியாக்குகிறது எனக்கு தெரிந்ததெல்லாம், ஒரு மலையும் பள்ளத்தாக்கும் மட்டும் தான். பள்ளத்தாக்கின் குழந்தை நான் மலையை வியக்கிறேன். ஒரு போதும் நான் மலை உச்சியை சென்று பார்க்கப்போவதில்லை. என் இலக்கெல்லாம் என்னை நிறைக்கிற அந்த வெறுமையை சரியாக உணர்வதும் அதை உணர்த்துவதும் தான். அதற்குரிய திரைமொழியை நான் இயற்கையிடம் யாசிக்கிறேன். நான் ஒரு காட்டுவாசி. என் பள்ளத்தாக்கின் மீது உயர்ந்து நிற்கின்ற அந்த மலை தன்னிடமிருக்கிற காட்டை காண்பித்து என்னை நடுங்கச் செய்கிறது. அங்கிருந்து தான் என் எல்லா கேள்விகளும் பிறந்திருக்க வேண்டும். அந்த காடுகளை தங்கள் இருப்பிடமாக அறிகிற என் அயல்வாசிகளைப்போல் நானும் இருந்திருந்தால் நானும் குறிஞ்சியின் குழந்தையாக என்னை உணர்ந்திருப்பேன்.. ஆனால் அது சாத்தியமற்றுப் போய்விட்டது..
இன்னும் என்னை சுற்றி இருக்கிற இயற்கையை என்னால் முழுமையாக வாங்கிக்கொள்ள முடியவில்லை. என் சக மனிதர்களை சுதந்திரமாக வாசிக்க பழகவில்லை. என்னை சூழ்ந்து இருக்கின்ற இந்த இயற்கையிடமும் மனிதர்களிடமும் இருந்து தான் என் படைப்புகளுக்கான சாரங்களை வாங்கவேண்டும்.
இந்த ஒட்டு மொத்த வாழ்க்கையும் எனக்கு கற்றுக்கொடுத்தது "பசி-காமம்" என்ற இரண்டை தான். இவை இரண்டையும் கடக்காமல் நான் என் காடுகளை அடைவது சாத்தியமில்லை. காடுகளை அடையாமல் மலைகளின் மீது பயணம் செய்ய இயலாது.
காமம் வரமாகவும் பசி சாபமாகவும் இருக்கும் என் இயற்கையில் நான் சாபத்தை நீக்கி வரத்தை அடைவதில் குறியாக இருக்கிறேன்.எப்போது சாபம் என்னிடமிருந்து பூரணமாக விலகுமோ..! அப்போது நான் வரத்தை ஒதுக்கிவைத்துவிட்டு என் இயற்கையை கடந்து, என்னை சூழ்ந்து இருக்கிற பள்ளத்தாக்கின் மலைகளின் ரகசியங்களை பிழிந்து அதன் சாரங்களை காலியாகக்கிடக்கும்என் இயற்கையின் பாத்திரத்தில் நிரப்பி அந்த ரசத்தை உங்களுக்கு அருந்தத் தர இயலும். அதுவரையில் என்னை வேட்டையாடுகிற உங்கள் கேள்வியை நிறுத்துங்கள். நிச்சயமாக நம்புங்கள் காலியாக இருக்கிற பாத்திரத்தில் தான் முழுமையை ஊற்றி நிரப்ப இயலும்.

Comments

  1. I hope you will do your level best and reach your heights as soon as possible.

    I am waiting for your good movie presentation in future...

    Best regards,
    Krishna Prabhu

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மூடியிருக்கும் கைகளுக்குள் இறுக்கத்தை தவிர வேறெதுவும் இல்லை.  விரல்களை மடல் போல் மெல்லத் திறந்து பார்க்கிறேன். வந்தமரும்  வண்ணத்துப்பூச்சி நீயில்லை. நவம்பர் மழையில் நனைந்து கொண்டே இருக்கிறது. நாளை பூக்குமென்று கனவுகள் காணுமென் காடு. அதிகாலை குளிர் கிழித்து கதிர் ஊசிகள் தைக்கும் போது இதயம் உன்னை நினைத்து கொள்கிறது.  அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் கேள்விகள். என்றேனும் வரக்கூடும்  பதிலாக ஒரு பட்டாம்பூச்சி.  அதிகாலை குளிர் அதிகரட்டி பேருந்து படிக்கட்டில் நான் பின்னிருக்கையில் நீ எண்ணங்கள் ஆயிரம்.  கண்ணதாசன் கைவிட்டான் பாரதி தீக்குளித்தான். ஷெல்லியும் ஷேக்ஸ்பியரும் செத்தே போனார்கள்.  தேன் கூட்டுக்குள் வண்ணத்துப்பூச்சி நெரிசலான பேருந்துக்குள்  நீ.  தொற்றிக் கொண்டது தொல் காப்பியத்துக்கு முன்பு தொடங்கிய  நம் தொல்லியல் காதல்.  ☕☕☕

ஆதிக்குடில்

காமுற்ற ஆதிதெய்வம்  நிலத்தில் கீறிய நகசித்திரம் போல்  கண்களை ஆசிர்வதிக்கிறது  அம் மலைக் கிராமம். உச்சியில் பெய்த மழைத்துளிகள் கலகலவென ஓடி வந்து கலங்கிய காவி நதியாகி கால்களை நனைக்கிறது.  பலாமரப்பட்டையில் தன் காதலி பெயரை  எழுதிப் பறக்கிறது மரங்கொத்தி. மலை முகட்டின் ஆதிக்குடியில் முதுவன்  காய்ச்சிய  புல்தைலம் மணக்கிறது. புல் குடியில் மூப்பன்  கட்டிய கருகமணித் தாலியுடன் நாளிகேர விளக்கேற்றும் புலத்தி. மலைப் புலத்தியின் சங்கின் சில்வண்டின் ரீங்காரமென குலவைச்  சத்தம். ஆற்றுமாமர நிழலில் அமர்ந்து  காட்டு நெல்லியின்  புளிப்பை ருசிக்கும் கருப்பியை கடந்து செல்கிறேன். முள்வேலி மீது படர்ந்திருக்கிறது முல்லையின் கந்தம்.. நாளிகேர நிழலில் வளரும் நந்தியார்வட்டை. தேக்கு மரத்தின் சிறிய  பூக்களால் ஆசிர்வதிக்கப் பெற்ற கண்ணாடிக் கூண்டுக்குள் குழந்தை இயேசுவுடன் மரியன்னை. நிச்சயிக்கப்பெற்ற  தேதிகளுக்கு முன்பே  மன்னிப்பை கேடயமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆலீஸின் வீடு. கால் நூற்றாண்டு கடந்தும் என் ஆன்மாவை கருணையோடு ஆசிர்வதிக்கிறது காதல்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

நமக்கேயான தனிமை  வாய்க்கும் போதெல்லாம்   நெருப்பை எரியவிட்டு   பனியடர்ந்த பள்ளத்தாக்கின்   குளிருக்குள்   பதுங்கிக் கொண்டோமல்லவா..!   அந்த ரகசியங்களை   கிளன்டேல் காடுகள்   பத்திரமாய் வைத்திருக்கிறது  இன்றும்..!