பட்டாம்பூச்சிக் கதைகள்
ஈக்களிடமிருந்து
தேனைத் திருடுவது போல்
உன்னிடமிருந்து கவிதைகளைத்
திருடுகிறேன்
"அடேய் திருட்டுப்பயலே"
"அடேய் திருட்டுப்பயலே"
என்று ஒற்றை வாக்கிய
அணிந்துரை எழுது
அது போதும்
நாளைக்கே புத்தகம்
போட்டுவிடுவேன்..!
கருத்துகள்
கருத்துரையிடுக