பட்டாம்பூச்சிக் கதைகள்
வாழ்வின் அவசரம்
முகத்திலறைய
முதுகில் அறையும்
வெயிலின் கரங்களை
சபித்துக்கொண்டே நடந்தேன்
மாநகர வீதியில்
நகரத்தெருக்களில் நடந்து
களைப்புற்று ஒதுங்கினேன்
பயணிகள் நிழற்குடையில்
"மச்சான்" என்ற குரலில்
அதிர்ந்து நிமிர்ந்தேன்
கல்லூரி வாழ்வில்
பழகிப்பிரிந்த
குட்டிசுவர்வாசிகளில் ஒருவன்
எப்பிடிடா இருக்க
உன் ஆளு எப்படி இருக்கா
என்ன பண்ற நீ எங்க இருக்க.....
அவன் கேட்டுக்கொண்டே இருக்கையில்
பதில்களேதுமற்ற நான்
மீண்டும்
ஒரு உபயோகமற்ற பொழுதில்
உன்னை சந்திக்கிறேன் என்று
எதிரில் வந்த பேருந்தில்
அவசரமாய் ஏறித் தொலைத்தேன்
அவன் நட்பை...
Nanpa....
பதிலளிநீக்கு